வெள்ளி, 1 ஜனவரி, 2010

வெல்க, மொரேல்ஸ்!

வெல்க, மொரேல்ஸ்!


“பூமித்தாய் பெற்றெடுத்த உலகக் கதாநாயகன்” என்று கடந்த அக்டோபர் மாதம் ஐ.நா. பொதுச்சபையால் புகழாரம் சூட்டப்பட்ட பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் மீண்டும் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

சுமார் 470 ஆண்டுகளாக ஸ்பெயின் ஆதிக் கத்தின் கீழ் இருந்த பொலிவியாவில் முதல் முறையாக அய்மாரா பூர்வ குடியைச் சேர்ந்த மொரேல்ஸ் 2006ம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது 45 சதவீதம் வாக்குகள் பெற்ற அவர், 2008 ஆகஸ்ட் 14ந்தேதி நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 57 சதவீதம் வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் மேலும் 10 சதவீத வாக்குகள் அதிகரித்து, 67 சதவீத வாக்கு கள் பெற்று, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அசைக்க முடியாத சக்தியினை பெற்றுள்ளார்.

மொரேல்ஸின் “சோசலிசத்திற்கான இயக் கம்” என்ற கட்சி மிகப்பெருவாரியான பொலிவிய மக்களின் மனதில் இடம்பெற்றிருப்பதற்கு, அவர்களின் நம்பிக்கையை மீண்டும் மேலும் வலுவான முறையில் பெற்றிருப்பதற்கு, கடந்த நான்காண்டுகளில் மொரேல்ஸ் ஆற்றிய மகத்தான பணிகளே காரணம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்டைக் களமாக இருந்த லத்தீன் அமெரிக்க நாடுகளில் முக்கியமான நாடு பொலிவியா. அமெரிக்க பெரும் நிறுவனங்களின் ஆடுகளமாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு முக்கிய மைய மாகவும் இருந்த பொலிவியாவில், மொரேல்ஸ் தலைமையிலான இடதுசாரிச் சார்பு கொண்ட ஆட்சி அமைந்த பின்னர் நிலச்சீர்திருத்தம் தீவிரப்படுத்தப்பட்டது; அந்நாட்டின் மிகப்பெரு வாரியான பூர்வகுடி ஏழை மக்களுக்கு நிலமும், கல்வியும், வேலைவாய்ப்பும் உத்தரவாதப்படுத் தப்படும் வகையிலான புதிய கொள்கைகள் அமலாக்கப்பட்டன; சமீபத்தில் எண்ணெய் நிறு வனங்களை தேசியமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; கடந்த மூன்றாண்டு களில் எழுத்தறிவின்மை கிட்டத்தட்ட முற்றிலு மாக ஒழிக்கப்பட்டுவிட்டது; லத்தீன் அமெரிக் காவில் கியூபா, வெனிசுலாவைத் தொடர்ந்து எழுத்தறிவின்மையிலிருந்து முற்றிலும் விடு தலைபெற்ற நாடாக பொலிவியா திகழ்கிறது; லட் சக்கணக்கான மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை உறுதிப்படுத்தியது மொரேல்ஸ் அரசு.

சமீபத்தில் கியூபாவின் மகத்தான தலைவர் பிடல்காஸ்ட்ரோ எழுதிய கட்டுரையில், மொரேல்ஸின் இந்த சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு, உலகை நாசப்பாதைக்கு கொண்டுசென்ற அமெரிக்க ஏகாதிபத்திய தேர்ந் தெடுத்த ஜனாதிபதி ஒபாமாவுக்கு அறிவிக்கப் பட்ட நோபல் பரிசு நியாயமாக மொரேல்ஸுக்குத் தான் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

டிசம்பர் 6ந்தேதி ஜனாதிபதி தேர்தலில் மேலும் பெருவாரியான மக்களின் இதயங்களை வென்று மொரேல்ஸ் மகத்தான வெற்றி பெறுவார் என்று பிடல் காஸ்ட்ரோ கூறியிருந்தார். அவரது வாக்கு இன்று நனவாகியுள்ளது. பொலிவிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் ஆலோ சனை நடத்தாமலே அரசியல் அமைப்புச் சட் டத்தைக் கூட மாற்றும் அளவிற்கு தற்போது மொரேல்ஸுக்கு பலம் கிடைத்துள்ளது. எனினும், “எமது இலக்கு ஒட்டுமொத்த பொலிவியாவின் வளர்ச்சி; மாற்றுப்பாதையில் நடைபோடும் வளர்ச்சி; அனைத்துத் தரப்பு மக்களையும் இணைத்துப் புதிய பாதையில் பொலிவியாவை முன்னேற்றுவோம்” என்று வெற்றி ஊர்வலத்தில் கூறியுள்ளார்.

வெல்க, மொரேல்ஸின் மகத்தான முன்னேற்றப் பயணம்!
நன்றி -தீக்கதிர்

கருத்துகள் இல்லை: